ETV Bharat / city

டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு- தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : May 5, 2021, 10:27 PM IST

Tasmac stores
டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் நாளை(மே.6) முதல் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருந்த நிலையில், டாஸ்மாக் நேரத்தை குறைத்து, காலை 8 மணி முதல் 12வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் நாளை(மே.6) முதல் 4 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணிபவருக்கே மது விற்பனை - டாஸ்மாக் நிறுவனம்

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு, காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் நாளை(மே.6) முதல் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருந்த நிலையில், டாஸ்மாக் நேரத்தை குறைத்து, காலை 8 மணி முதல் 12வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் நாளை(மே.6) முதல் 4 மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணிபவருக்கே மது விற்பனை - டாஸ்மாக் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.